திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்,கிரிவலம் செல்லும் முறை,திருக்கார்த்திகை, பௌவர்ணமி கிரிவலம் , மஹாசிவராத்திரி , சனிப்பிரதோஷம்

 பிரம்மாவுக்கும் பெருமாளுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்சை வந்தது.  அவர்கள் சிவனை அணுகினார்கள் அதற்கு அவர் நெருப்பு வடிவாக வானுக்கும் பூமிக்கும் ஆக உயர்ந்து நின்றார் தனது உச்சியை பிரம்மாவும் பாதத்தை பெருமாளும் பார்த்துவரும் படி அனுப்பினார். இருவராலும் அதை பார்க்க முடியவில்லை. உடனே பெருமாள் தனது தோல்வியை சிவனிடம் ஒப்புக்கொண்டார் . பிரம்மாவோ முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார் . பிரம்மா பொய் சொன்னதால் இனி மேல் பூமியில் பிரம்மாவுக்கு பூஜை கிடையாது என்ற தண்டனையை சிவன் வழங்கினார் . பின் சிவனின் நெருப்பு வடிவம் குளிர்ந்து உயர்ந்த மலையாக மாறியது . இதுவே அண்ணாமலை ஆனது .


நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை



திருவண்ணாமலை என்ற  பெயர் வந்த காரணம்

அண்ணா என்னும் சொல்லுக்கு நெருங்க முடியாது என்ற பொருளும் உண்டு.
நெருப்பு மலை என்பதால் யாராலும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது . கலியுகத்தில் நம்மீது அன்பு கொண்டு மலையாய் இருக்கும் சிவன் குளிர்ந்து நம்மை அருகில் வர அனுமதிக்கிறார் .

முன்பு அண்ணாமலையில் வசித்த அடியவர் ஒருவர் கணம்புல் கொண்டு திரியிட்டு ஸ்வாமிக்கு விளக்கேற்றி வந்தார் . அப்போது அந்த புல்லுக்கு தட்டுப்பாடு வந்தது . அப்போது தன்முடியையேதிரியாக்கி தீபம் ஏற்ற முயன்றார் . சிவனும் பார்வதியும் தோன்றி அவரை தடுத்து ஆட்கொண்டனர் . அவரது மனோதிடத்தை பாராட்டி நாயன்மார்களில் ஒருவராக்கினார் . கணம்புலால் விளக்குஏற்றியதால் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டார் .

ஒரு மலையே சிவனாக இருக்கிறது என்றால் அது தான் அண்ணாமலை . அண்ணா என்றால் மிக உயர்ந்த அண்ணாந்து பார்க்க வைக்கும் மலை அண்ணாமலை அத்துடன் மரியாதை நிமித்தம் ஆக திரு சேர்த்து திருவண்ணாமலை என்று அழைக்கப்பட்டது .
இங்கே அண்ணாமலையாரும் , அபிதகுஜாம்பிகை  என்னும் உண்ணாமுலை அம்மனும் அருள் தருகின்றனர் . இந்த அம்மன் எல்லா உயிர்களுக்கும் அருள் புரிபவள் உண்ணாமுலை எவ்வளவு கேட்டாலும் வரம் தரும் அன்னையெனப்பெயர் பெற்றாள் .

திருவண்ணாமலை சிறப்பு

திருவண்ணாமலை 2748 அடி உயரம் கொண்டது இதை ஒரு முறை சுற்றி வர 14 கிலோமீட்டர் ஆகும் . 200 கோடி  ஆண்டுக்கு மேலாக  இந்த மலை உள்ளது . இந்த திருவண்ணாமலை ஒரு பழமையான , வரதையான மலையாகும் .

அண்ணாமலையார் கோவில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது . இங்கு 9 கோபுரங்கள் உள்ளது . இதனுடைய ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது .

திருக்கார்த்திகை அன்று இந்த திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம் ஆகும் . இது பெரும் விழாவும் ஆகும் .
இந்த தீபத்திற்கு பெயர் பரணி தீபம் .மலை  தீபம்  என்றும் கூறுகிறார்கள் .


கிரிவலம் செல்லும் முறை

திருவண்ணாமலைக்கு கிரி வலம் செல்லும் பக்தர்கள் கிரிவல பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்க கோவில்கள்  உள்ளது .

முதலில் இந்திரலிங்கத்தை வணங்கிவிட்டு கிரி வலத்தை துவங்க வேண்டும் . தொடர்ந்து
2.அக்னி லிங்கம்
3. எம லிங்கம்
4. நிருதி லிங்கம்
5. வருண லிங்கம்
6. வாயு லிங்கம்
7. குபேர லிங்கம்
தரிசனம் முடித்து சுடுகாட்டில் உள்ள
8. ஈசான லிங்க கோவிலுக்கு செல்ல வேண்டும்
மனித வாழ்வின் முடிவு நிலை இறப்பு என்னும் தத்துவத்தை இங்கே உணர முடியும் .

இதன்பிறகு அண்ணாமலையாரை கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் . இதனுடன் கிரிவலமும் அண்ணாமலையார் தரிசனமும் நிறைவு பெரும் . இதுவே கிரிவலம் ஆகும் .

திருவண்ணாமலையின் விசேஷ நாட்கள்

கிரிவலம் வர உகந்த நாட்கள் திருக்கார்த்திகை, பௌவர்ணமி கிரிவலம் , மஹாசிவராத்திரி , சனிப்பிரதோஷம் இந்த நாட்களில் கிரி வலம் செல்வது சிறப்பானது .

No comments:

Post a Comment